Wednesday 2 January 2019

Thiruvarurbyeelection2019 - திருவாரூர் இடைத்தேர்தலுக்கு 303 வாக்குச்சாவடி மையங்கள்


திருவாரூர் இடைத்தேர்தலுக்கு 303 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும் என்றும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியுடைய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திருவாரூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,58,687, ஆண்கள் - 1,27,500 பேர், பெண்கள் -1,31,169 பேர், 3-ம் பாலினத்தவர் - 18 பேர் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment