Saturday 18 March 2017

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி


சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தமிழகம் முழுவதும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க உத்தரவிட்டது. அதன் பேரில் தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கலந்து கொண்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் பார்த்திபன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இலக்குமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment