Tuesday 24 September 2013

சமையல் எரிவாயு உள்ளவர்கள் கவனத்துக்கு - ஆதார் அட்டை குழப்பம்

வரும் 01-01-2014 முதல் திருவாரூர் மாவட்டத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளைக்கு அரசு தரும் மானியம் தொகைகளை இண்டேன் கேஸ் வாடிக்கையாளர் வங்கி கணக்கு நேரடியாக  தரும் திட்டத்தை (DBTL) மத்திய அரசு செயல் படுத்த உள்ளது  .
 

மானிய திட்டத்திற்கு கட்டாயம்எலக்ட்ரானிக் அடையாள அட்டை, "ஆதார்' கார்டு வழங்கும் திட்டம், கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டிருக்கும். அதில், அட்டை வைத்திருப்பவரின் அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அவரின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு எண், சமையல் காஸ் இணைப்பு எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் என, அனைத்து விவரங்களும் இருக்கும்.
விரல் ரேகை, விழி
த் திரையைப் பதிவு செய்யும் ஆதார் அட்டை திட்டம் 2009-ல் தொடங்கப்பட்டது. இதற்காக இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனியைத் தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) உருவாக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக இதுவரை ரூ.50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசின் மானியத் திட்டங்களான, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், பொது வினியோகத் திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம், பென்ஷன், மானிய விலை சமையல் காஸ் இணைப்பு, வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான நிதியுதவி, உயர்கல்வி ஊக்கத் தொகை போன்ற திட்டங்களுக்கான நிதி, ஆதார் அட்டை வாயிலாக பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த அடையாள அட்டையை மானிய திட்டத்திற்கு கட்டாய அடையாள அட்டையாக பயன்படுத்தி நாடு முழுவதும் விரிவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் காஸ் மானிய திட்டம், ஆதார் அட்டை மூலம் வங்கி கணக்கு துவக்குபவர்களுக்கு உங்கள் பணம் உங்கள் கையில் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.



 

ஆதார் அட்டை பெற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விருப்பமெனில், அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
 
 
அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டயம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி புட்டுசாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
அந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.செளகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி புட்டுசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் தவான், திருமணப் பதிவு உள்பட அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
 
 
 
 
 
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், ஆதார் அட்டை பெற்றுக் கொள்வது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும், கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
 
 நமதுரை பொருத்தவரையில் ஆதார் அட்டை அனைவருக்கும் அளிக்கப்பட்டது என்றால் இல்லை என்பதே உண்மை கடந்த மார்ச்  மாதம் நமதூரில் முகாம் குறைந்தது 10 நாட்கள் மேல் நடைபெற்றது
இதில் 50 சதவிதம் மக்கள் பயன் அடைந்து இருக்கலாம் ஆனால் ரூபாய் 900 உள்ள சிலின்டர் மக்கள் வாங்க வேண்டும் ஒரு ஆண்டுக்கு 9 உருளைக்கு ரூபாய் 450 வரை  மானியம் தரப்படும் .வீட்டு வரும் உருளையை வாடிக்கையாளர் தன் கை ரேகை கொண்டு பதிய பெற்றே பெற முடியும்
 
ஆதார் அட்டை எண் கிடைக்க பெறாதகள் உடன் பெற சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்.
 
 
 
இந்த முகவரியில் ஆதார் எண்ணுடன் உங்கள் முழு விபரத்தை தெரிவிக்கவும்
அல்லது பிரியா காஸ் அல்லது செம்மலர் காஸ் ஏஜென்ட்களை தொடர்பு கொள்ளவும் கடைசி நேர  பரபப்பு வேண்டாம் 

 
 
 
 
திட்டம் வெற்றி பெற அரசு நிர்வாகம் முழு ஈடுபட்டாலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுபோல அரசும் மக்களின் அச்சத்தை போக்கி தவறுகள் நடக்காமலும் காக்க வேண்டும்.

 
 
 
 
 
 

No comments:

Post a Comment