Saturday 5 August 2017

குடியரசு துணை தலைவர் தேர்தல்; வெங்கய்யா நாயுடு வெற்றி

புதிய குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்காக இன்று வாக்கு பதிவு காலையில் தொடங்கியது.  அதன்பின்பு மாலை 5 மணியளவில் வாக்கு பதிவு நிறைவு பெற்றது.

வாக்கு பதிவிற்கான மொத்தமுள்ள 785 வாக்குகளில் 711 வாக்குகள் பதிவாகியுள்ளன.  இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு முன்னிலை பெற்றார்.  இந்நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதீய ஜனதா வேட்பாளர் வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment