Sunday 27 August 2017

பொது சிவில் சட்டம் பற்றிய அறிக்கை அடுத்தாண்டு தாக்கல் செய்யப்படும் - சட்ட ஆணையம்

இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனியே சட்டங்கள் இருக்கும்போது பொது சிவில் சட்டம் சாத்தியமா என்பது குறித்து ஆராய கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட ஆணையத்திடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

உச்ச நீதிமன்றம் முத்தலாக் விவகாரத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது ஆணையம் தனது பணியில் மெதுவாக செயல்பட்டு வந்தது. முத்தலாக் விஷயத்தில் கொடுக்கப்படும் தீர்ப்பு தங்களின் பணிக்கு உதவும் என்பதால் இக்குழு காத்திருந்தது. தனிநபர் சட்டங்களின் மீது உச்சநீதிமன்ற எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது முத்தலாக்கை நீக்குவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று கருதியுள்ளது ஆணையம்.

இந்த ஆணையத்திற்கு இதுவரை தனிநபர் சட்டங்கள் குறித்து 45,000 எழுத்து பூர்வமான கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் மீது அனைத்துக் கட்சிகளின் கருத்தைக் கேட்கப்போவதாக அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment