Tuesday 8 August 2017

11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா? இங்கு தெரிந்து கொள்ளலாம்


பான் கார்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள், பொய்யான விவரங்களைக் கொடுத்து பெறப்பட்ட பான் கார்டுகள் உள்ளிட்ட போலி கார்டுகளை வருமானவரித்துறை முடக்கி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பான் கார்டு செயலலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளும் வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் இதுதொடர்பான தகவலை சரிபார்த்துகொள்ளலாம் எனதெரிவித்துள்ளது.

www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் 'சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'நோ யுவர் பான்' என்பதற்குள் நுழைய வேண்டும். அங்கு பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அலைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய எண் வரும். அதைப் பதிவு செய்தால், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பான் கார்டு வாங்கியுள்ள 29 கோடி பேரில் 6.2 கோடி பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும், 5.2 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment