Tuesday 19 March 2019

மீண்டும் பாஜக ஆட்சி அமையும் .கருத்துகணிப்பில் தகவல்

*மீண்டும் பாஜக ஆட்சி..! கருத்து கணிப்பில் தகவல்*



மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஆங்கில ஊடகம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகமான *டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்.* இணைந்து மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து கருத்துக் கணிப்பில் ஈடுபட்டன. நாடு முழுவதும் 17,000 பேரிடம் கருத்துகளை கேட்டதாகவும் இந்த கருத்து கணிப்பில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்குமென கூறப்பட்டுள்ளது.


இதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 135 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 125 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 35 தொகுதிகளிலும், பா.ஜ.க இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் திமுக கூட்டணிக்கு 52.20 சதவிகித வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 37.20 சதவிகித வாக்குகளும் கிடைக்க கூடுமென கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளிலும், ஆளும் இடது சாரி கூட்டணி 3 தொகுதிகளிலும், பா.ஜ.க கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆளும் தெலுங்கு தேசம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.



17 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 13 தொகுதிகளும், பா.ஜ.க கூட்டணிக்கு 2 தொகுதிகளஙும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுமென கூறப்பட்டுள்ளது.

28 தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தில் பா.ஜ.க கூட்டணி 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.

42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் 31 தொகுதிகளிலும், பா.ஜ.க. 11 இடங்களிலும், வெற்றி பெறுமென கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பெரிய மாநிலமும் 80 தொகுதிகளை கொண்டதுமான உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 42 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.

48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் பா.ஜ.கவுக்கு 39 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணிக்கு 9 தொகுதிகளிலும், காங்கிரசுக்கு 1 தொகுதியிலும், இதர கட்சிகளுக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

40 தொகுதிகளை கொண்ட பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்குமென கூறப்பட்டுள்ளது.

26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.

7 தொகுதிகளை கொண்ட டெல்லியில் அனைத்து இடங்களும் பா.ஜ.கவே கைப்பற்றுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment