Sunday 18 November 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம்



நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் இன்று காலை 10:15 மணிக்கு நடைப்பெற்றது.

இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்றும், பள்ளிக்கேனி மதில் சுவர் கட்டுவது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோருவது பற்றிய அறிக்கை தயார் செய்வது என்றும் ,ஜமாஅத் பைலா மற்றும் மத்லபுல் கைராத் கல்விகுழுமம் பைலா திருத்துவது குறித்த பொருளை ஒத்திவைப்பது என்றும், மௌலீது தப்ருக் பகலில் தருவதுற்கு ஒப்புதல் அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதி 4வது பொருள் பற்றி சச்சரவு குழப்பம் ஏற்பட்டதால் நிகழ்வுகளை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதில் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ,துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் தெருபிரதிநிதிகள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

 18.11.2018

No comments:

Post a Comment