Tuesday 31 December 2013

.வெல்கம் 2014............


தேர்தல் ஆண்டே வருக நிலையான ஆட்சி தருக

2014 ம் ஆண்டு இன்று பிறந்து உள்ளது .இந்தியாவின் அடுத்த 5 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் யாரை அமர்த்த போகிறோம் என்பதை தீர்மானிக்கும் ஆண்டு பிறந்து உள்ளது.

இப்பொழுது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மீண்டும் ஆள முடியுமா அல்லது பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரபாய் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலருமா அல்லது தமிழக முதல்வர் ஜெயலலிதா ,முலாயம் சிங், மாயாவதி, கருணாநிதி தலைவர்களின்  மூன்றாம் அணி ஆட்சி கனவு பலிக்குமா என்பதை மக்கள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வாக்கு பதிவு இயத்திரத்தில் முடிவு செய்வார்கள் .இனி வரும் ஆறு மாதம் காலம் முழுவதும் மக்கள் நிறைய காட்சிகளை கண்டு களிக்காலம்.கட்சிகள் நடத்தும் மாநாடுகள் ,சமுதாய அமைப்புகள் ,அரசு சார்ந்த சங்கங்கள்  கோரிக்கைகள் கொண்டு மக்களை திரட்டும் போராட்டம் ,தேர்தல் புறக்கணிப்பு, நோட்டா வில் வோட்டை பதிவுசெய்ய வேண்டுகோள்  என பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .இவைகள் எல்லாம் நாடு முழுவதும் காணும் நிகழ்வுதான் .ஆனால் வோட்டுக்கு எவ்வளது பணம் கிடைக்கும் அதுவும் கட்சிகாரர்கள் கமிஷன் வெட்டாமல் கிடைக்குமா எது மக்களின் எதிர்பார்ப்பு .வளர்ச்சி திட்டம் எல்லாம் இந்த 500 ருபாய்  அப்பறம் தான்.

 

தேர்தல் முலமாக நிலையான அரசு அமைய வாய்ப்பு குறைவுதான் .காங்கிரஸ் முலமாக கடந்த 10 ஆண்டுகளாக பயன் அடைத்த பெரும் பணக்காரர்கள் இப்போது மோடிக்கு ஊடகம் முலமாக பிரசாரம் செய்கிறார்கள் .

2014 ம் ஆண்டு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயம் இல்லை என் என்றால் தமிழக கட்சிகள் தற்போதிய நிலைகள் மாறிவரும் சூழ்நிலைகள் அதிரடிகள் எல்லாம் வரும் நாட்களில் காணலாம் . பேஸ்புக் முக்கியமாக இடத்தில இருந்து தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்

.வெல்கம் 2014

No comments:

Post a Comment