Friday 8 September 2017

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை உச்சநீதிமன்றம்


நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை.   நீட் தேர்வுக்கு எதிராக  சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம்.  சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். 

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment