Sunday 17 September 2017

காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?



தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. குமரி, நெல்லை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக மின்வெட்டு இல்லாமல் இருந்து வந்தது. தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி, 90 நாட்களுக்கும் மேலாக காற்றாலைகள் மூலம், சிறப்பான வகையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இதில் இருந்து தமிழகத்தின் மின் தேவைக்கு தினமும் 2,500 முதல் 3,500 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மின்உற்பத்தி குறைந்தது

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த 10-ந்தேதி 674 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், 11-ந்தேதி 285, 12-ந்தேதி 115, 13-ந்தேதி 129, 14-ந்தேதி 531, 15-ந்தேதி 1,503, நேற்று (16-ந்தேதி) 1,954 மெகாவாட் மின்சா

No comments:

Post a Comment