Friday 29 November 2013

நகரசபை கூட்டத்தில் கோரிக்கை

திருவாரூரில்

கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

நகரசபை கூட்டத்தில் கோரிக்கை


திருவாரூர், நவ.26-

திருவாரூரில் கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நகரசபை கூட்டம்

திருவாரூர் நகராட்சி கூட் டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் ரவிச்சந் திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில், நகராட்சி ஆணையர் தர்ம லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

ஜாகீர்உசேன்(காங்கிரஸ்):-

கொடிக்கால்பாளையம் பள்ளிக்கூடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு டெண் டர் விடப்பட்டும் பணிகளை தொடங்கவில்லை.

ஆர்.டி.மூர்த்தி (அ.தி. மு.க.):- திருவாரூர் நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதற்கு அனைத்து வார்டு களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மடப்புரம் சம்பத் (காங்கி ரஸ்):- திருவாரூர் பேட்டையில் குடியிருக்கும் துப்பரவு பணி யார்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

கோமாரி நோய்

செந்தில் (துணைத்தலை வர்):- நாய் தொல்லை அதிக மாக உள்ளது. வெறி நாயால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ஜமால்முகமது(தி.மு.க.):-

கோமாரி நோயால் மாடுகள் பாதிக்கபட்டு வருகின்றன. கோமாரி நோயை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வரதராஜன்(சுயேச்சை):- ராமநாதன் நகரில் சாலை மிகவும் பழதடைந்து உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோகன் (தி.மு.க.):- கிடாரங்கொண்டான் பை-பாஸ் சாலையை மேடு, பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும். திருவாரூர் பகுதிகளில் மழை வெள்ளம் வடிந்தோடும் வகையில் வடிக்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ரவிச்சந்திரன் (தலைவர்):-

திருவாரூர் நகரில் 15 நாட் களில் ஆக்கிரமிப்புகள் அகற் றப்படும். உறுப்பினர் களின் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment