Saturday 27 July 2024

மௌத் அறிவிப்பு




27.07.2024


நமதூர் ராமகே ரோடு அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும்,அப்துல் வாஹித் அவர்களின் மச்சானும் , முஹம்மது நஜூபுதீன் மற்றும் ஜெஹபர் சேக் அலாவுதீன் இவர்களின் தகப்பனாரும், லெட்சுமாங்குடி மர்ஹூம் சேக் ராவுத்தர் அவர்களின் மகனாரும், லெட்சுமாங்குடி ஹாஜி முகம்மது அவர்களின் மாமனாருமான ஹாஜா மெய்தீன் அவர்கள் ஸூஃபி நகர் தெற்கு தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday 26 July 2024

மௌத் அறிவிப்பு





நமதூர் தினா இப்ராம்சா தெரு நிஷா காலனியில் கொட்டாரக்குடியார் வீட்டு மர்ஹீம் முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனாரும் மர்ஹீம M.முகம்மது இஷாக் மற்றும் M.முகம்மது ஃபாரூக் அவர்களின் சகோதரரும் A.ஜெகபர் சாதிக் A.முகம்மது இபுராகிம் சாதிக் A. முகம்மது யூசுப் ஆகியோரின் தகப்பனாரும் மான M. அப்துல் ரெஜாக் அவர்கள் தனது இல்லத்தில் மௌத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 



அன்னாரின் ஜனாசா நாளை பகல் 11 மணியளவில்  நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர்

Sunday 21 July 2024

கொடிக்கால் பாளையம் ஜமாஅத் தேர்தல் 2024




21.07.2024


நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்தின் தற்போதைய நிர்வாகத்தின் பொறுப்பு காலம் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1446 ரபீவுல் ஆகிர் பிறை 11அன்றுடன் நிறைவடைகிறது.

 இதற்கான புதிய  நிர்வாக சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்வு செய்ய ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் இன்று ஜமாஅத் தலைவர் ஹாஜி கா.மெ.மு.அ.முகம்மது ஜபரூதீன் அவர்கள் தலைமையில் மஃஸூம் மஹாலில் நடைப்பெற்றது. 


இதில் தேர்தல் அதிகாரிகளாக கீழ் காணும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.



1.ஜனாப். ப.மு.ஹபிபுல்லாஹ்

(நடுத்தெரு)


2.ஹாஜி V.S.N.M முஹம்மது இஸ்மாயில் 

(ஆசாத்நகர்)


3.ஜனாப் B.முஹம்மது கஜ்ஜாலி (புதுமனைத்தெரு)



இதில் ஏராளமான ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

Saturday 6 July 2024

திருவாரூர்

 

இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை உயிா்காக்கும் பயிற்சி (Cardio Pulmonary Resuscitation) கொடுப்பதற்காக "ஆருயிர்" - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார்.