திருவாரூரில் திங்கள்கிழமை
நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 360
பேர் மனு அளித்தனர். மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்
எம்.மதிவாணன் தலைமையில் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பட்டா பெயர் மாற்றம், புதியக்குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு
அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து
360 பேர் மனு அளித்தனர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில்
ஒருவருக்கு ரூ.5,000 மதிப்பில் காதுகேளாதோருக்கான நவீன காது கேட்கும்
கருவி, ஒருவருக்கு ரூ.5,000 மதிப்பில் சக்கர நாற்காலி, 2 பேருக்கு ரூ.500
மதிப்பிலான மடக்கு குச்சி என மொத்தம் ரூ. 11,000 மதிப்பில் நலத்திட்ட
உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ்,
சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
No comments:
Post a Comment