Wednesday 26 August 2020

கொடிக்கால்பாளையம் பள்ளிக்கேனி மீன் குத்தகை ஏலம் அறிவிப்பு

 ☪️ *KOM NEWS ONLY*🕌


*முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஜமாஅத் அறிவிப்பு*


இன்ஷாஅல்லாஹ் வரும் 28.08.2020 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் *(ஹாஸ்பாவா தர்ஹா)* வில் பள்ளிக்கேணி மீன் குத்தகை ஏலம் விடப்படும்.


26.08.2020

Tuesday 25 August 2020

*வெளியூர் மௌத் அறிவிப்பு

 


25.08.2020


கொடிக்கால்பாளையம் நடுத்தெரு கோசு வீட்டு மர்ஹூம் கோ.மு.சா.முஹம்மது யாசீன் அவர்களின் சம்மந்தரும்,சேத்தப்பா என்கிற M.சேக் அப்துல் காதர் அவர்களின் மாமனாருமான *அப்துல் ஜப்பார்* அவர்கள் அடியக்கமங்கலம் கீழச்செட்டித்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*

 

 அன்னாரின் ஜனாஸா இன்று காலை11 மணிக்கு அடியக்கமங்கலத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.


🎤🎤🎤🎤

KOM NEWS ONLY

Saturday 22 August 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு

 மௌத் அறிவிப்பு


22.08.2020


கொடிக்கால்பாளையம் மலாயாத்தெரு பத்தி இ.மு.மு.அப்துல் ஜெமீல் அவர்களின் மருமகனும் மர்ஹூம்S.A.M.ஹமீது சுல்தான் அவர்களின் மகனும் முஹம்மது இம்ரான் அவர்களின் தகப்பனாருமான H.சேக்அலாவுதீன் அவர்கள் ஆதலையூர் கரைப்பாக்கம் நடுத்தெருவில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.


 அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30க்கு ஏனங்குடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

வெளியூர் மௌத் அறிவிப்பு 22.08.2020

 மௌத் அறிவிப்பு!


21.08.2020


அடியக்கமங்கலம் கீழச்செட்டித்தெரு ‘மர்ஹும்’J.M.அப்துல் கபூர் அவர்களின் மகனும்,J.M.A.அன்சாரி அவர்களின் சகோதரரும்,ராஜா என்கிற M.செய்யது இஸ்மாயீல் அவர்களின் தகப்பனாரும் முன்னாள் ஜமாஅத் தலைவருமான *J.M.A.முஹம்மது தாவுது* அவர்கள் அடியக்கமங்கலம் புதுமனைத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*

 

 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 

இன்ஷாஅல்லாஹ்!

Friday 21 August 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 21.08.2020


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நமதூர் ஜெயம்தெரு சி.ப.மு.அ.நசஸீருதீன் மற்றும் மலாயாத்தெரு வெ.ப.மு.அ.முஹம்மது பாரூக் ஆகியோர்களின் மாமியாரும் ஆழியூர் மர்ஹூம் V. அப்துல் ரஷீத் அவர்களின் மனைவியுமாகிய சபுராநாச்சியார் ஆழியூர் வடக்குத்தெருவில் மொத் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும்

Monday 17 August 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 17.08.2020

 *அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு* 


17.08.2020 திங்கட்கிழமை


நமதூர் நடுத்தெரு குள்ளகத்தரிகாய் வீட்டு மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா அவர்களின் கொளுத்தியாளும் ஆ.மு.அ.முஹம்மது யூசுப் அவர்களின் மாமியாரும் அடியக்கமங்கலம் மர்ஹூம் முஹம்மது ஜெஹபர் அவர்களின் மனைவியுமான அருவகார வீட்டு ஹதிஜா பீவி அவர்கள் அடியக்கமங்கலம் முஹமதியா தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.



🎤🎤🎤🎤

 *KOM NEWS ONLY* 

 *கொடிக்கால்பாளையம் செய்திகள் மட்டும்*

Sunday 16 August 2020

கொடிக்கால்பாளையம் டாக்டர் அபுல் ஹசன்

 🌹🌸🌷🌹🌷🌸


 *பெருமைப்படுகிறோம்* 


💐💐💐💐💐💐💐


#திருவாரூர் - #கொடிக்கால் பாளையம் மேலத்தெருவை சேர்ந்த #ஈரோடு சிட்டி ஹாஸ்பிடல் நிறுவனர் பட்டரைவீட்டு டாக்டர் K.M.அபுல் ஹசன் அவர்கள் கோவிட் 19யால் பாதிக்கப்பட்டவர்களை அரசுடன் இணைந்து தனது மருத்துவ சேவைப்பணியை சிறந்த முறையில் ஆற்றியதற்காகவும் அதைப்போல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ததை பாராட்டி  இன்றைய சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அவர்கள் பாராட்டு சான்றிதழ்  வழங்கினார்.*


*இதைப்போல் மேன்மேலும் மருத்துவ சேவை பணியை தொடர வல்ல அல்லாஹ் நல்ல உடல் ஆரோக்கியத்தை உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு தந்து அருளுவானாக* 


*ஆமீன்...*