Tuesday 31 July 2018
Monday 30 July 2018
Sunday 29 July 2018
Saturday 28 July 2018
நமதூர் நிக்காஹ் தகவல் 30/07/2018
நமதூர் நடுத்தெரு M.முஹம்மது பஹ்ருதீன் அவர்களின் மகனார் முஹம்மது நஸ்ருதீன் மணமகனுக்கும் கூத்தூர் M.அஹம்மது கபீர் அவர்களின் மகளார் நூருல் ஆஷிகா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 ம் ஆண்டு துல்காயிதா 16 (30/07/2018) திங்கட்கிழமை காலை 11மணிக்கு கீழ்வேளூர் ஹனிப் திருமண மஹாலில் நடைப்பெற உள்ளது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்:
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
Friday 27 July 2018
நமதூர் நிக்காஹ் தகவல் 29/07/2018
நமதூர் நடுத்தெரு M.முஹம்மது பஹ்ருதீன் அவர்களின் மகளார் நஜ்லா மணமகளுக்கும் காரைக்கால் - நிரவி முஹம்மது ஃபாரூக் அவர்களின் மகனார் ஷாஹிதுல் கரீம் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி1439ம் ஆண்டு துல்காயிதா பிறை 15 (29/07/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடுத்தெரு மணமகள் இல்லத்தில் நடைப்பெற உள்ளது.
_____________________________________________
நமதூர் புதுமனைத்தெரு A.M.நூருல்லாஹ் அவர்களின் மகளார் ஆயிஷா சித்திக்கா மணமகளுக்கும் அடியக்கமங்கலம் A.S.M.காதர் இல்யாஸ் அவர்களின் மகனார் அர்மான் அலி மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439ம் ஆண்டு துல்காயிதா பிறை 15 (29/07/2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைப்பெற உள்ளது.
நமதூர் ராமகே ரோடு ஹசன் முஹம்மது அவர்களின் மகனார் ரஹ்மத்துல்லா மணமகனுக்கும் ஆழியூர் அப்துல் லத்தீப் அவர்களின் மகளார் மதீனா பேகம் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்காயிதா பிறை 15 ( 29/07/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு ஆழியூர் உமர் பின் கத்தாப் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்த செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமானது: இன்று முழு சந்திர கிரகணம்: 103 நிமிடங்கள் நீடிக்கும்
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்குகிறது. 103 நிமிடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிக்கிறது. அப்போது நிலா, ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும்.
முன்னதாக இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணமாக தொடங்குகிறது.
இந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.
மேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது.
அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந் தேதி நிகழும். அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.
இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முழு சந்திர கிரகணத்தைத் நேரிடையாகவும், தொலைநோக்கிகள் மூலமாகவும் பார்த்து பயன்பெறும் வகையில் சென்னை, காந்தி மண்டபம் சாலையில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவில் தெரியக்கூடிய இதுபோன்ற ஒரு முழு சந்திர கிரணம் மீண்டும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 21-ந் தேதி இரவில் நிகழ உள்ளது.
இந்த தகவல்களை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் பொறுப்பு செயல் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள், சென்னையில் நேற்று வெளியிட்டார்.
Thursday 26 July 2018
திருவாரூரில் 54 இடங்களில் கண்காணிப்பு கேமரா
திருவாரூர் நகர பகுதிகளில் குற்றங்களை தடுக்க வசதியாக போலீஸ் துறை சார்பில் 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் நகரில் குற்றங்களை தடுக்க 54 இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படு கிறது.
இதேபோல் விரைவில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மாவட்டம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் 475 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 4,268 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 75 சதவீத வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் லெக்குமணன், கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Wednesday 25 July 2018
Tuesday 24 July 2018
Monday 23 July 2018
Sunday 22 July 2018
Saturday 21 July 2018
Friday 20 July 2018
நமதூர் நிக்காஹ் தகவல்கள் 22/07/2018
நமதூர் பள்ளிவாசல் தெரு M.அப்துல் ரவூப் அவர்களின் மகனார் தௌஃபீக் அஹமது மணமகனுக்கும் பள்ளிவாசல் தெரு M.முஹம்மது ஜலீல் அவர்களின் மகளார் அஃபரின் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1439 ஆண்டு துல்காயிதா பிறை 8 (22/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைப்பெறள்ளது.
_____________________________________________
நமதூர் மலாயத்தெரு M.A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளார் சபுருன்னிசா மணமகளுக்கும் அடியக்கமங்கலம் M.ஜாபர் அலி அவர்களின் மகனார் முஹம்மது ஹனிஃப் சுஹைல் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 ஆண்டு துல்காயிதா பிறை 8 (22/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைப்பெற உள்ளது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
_____________________________________________
நமதூர் மலாயத்தெரு M.A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளார் சபுருன்னிசா மணமகளுக்கும் அடியக்கமங்கலம் M.ஜாபர் அலி அவர்களின் மகனார் முஹம்மது ஹனிஃப் சுஹைல் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 ஆண்டு துல்காயிதா பிறை 8 (22/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைப்பெற உள்ளது.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
_____________________________________________மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 18) தொடங்கியது. அவை துவங்கிய முதல் நாளே, மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளித்தது.
தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது, அனைத்து தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தெலுங்குதேசம் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட்ட உடனேயே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, “பெரிய கட்சியான எங்கள் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம்தான் முதலில் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.
தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று (20-ந் தேதி) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள் முழுவதும் விவாதம் நடத்தப்படும். அதன்பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.
இதையொட்டி இன்று சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து உள்ள நிலையில், முதல் முறையாக நாளை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது.
535 உறுப்பினர்களைக் கொண்டு உள்ள மக்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்கு சபாநாயகருடன் சேர்த்து 274 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆதரிக்கிற பிற சிறிய கட்சிகளின் உறுப்பினர்களையும் கணக்கில் கொள்கிறபோது பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசுக்கு மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
இருப்பினும் நேற்று முன் தினம், சபைக்கு வெளியே டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் “நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற எதிர்க்கட்சிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லையே?” என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு அவர், “எங்களுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை என்று யார் சொன்னது?” என எதிர்க்கேள்வி எழுப்பினார்.
ஆக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து உள்ள எதிர்க்கட்சிகள் தாங்கள் வெற்றி பெறுவோம் என கூறும் வேளையில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசோ நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ‘சந்திக்கத் தயார்’ என கூறி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆதரவு இல்லை
மோடி அரசு மீது தெலுங்குதேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்று முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார். நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் தேஜகூ-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
இந்த இரண்டு கட்சிகளும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும், எதிராக வாக்களிக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை இந்த இரு கட்சிகளும் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான சிவசேனா, நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது. சிவசேனா கட்சியின் அனைத்து எம்.பிக்களும் இன்று டெல்லியில் இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார்.
Thursday 19 July 2018
Wednesday 18 July 2018
Tuesday 17 July 2018
Monday 16 July 2018
Sunday 15 July 2018
Saturday 14 July 2018
Friday 13 July 2018
நமதூர் நிக்காஹ் தகவல்கள் 15/07/2018
நமதூர் ராமகே ரோடு S. செய்யது ஜெஹபர் சாதிக் அவர்களின் மகளார் பர்ஹானா மணமகளுக்கும் திருவிடச்சேரி R.சம்சுதீன் அவர்களின் மகனார் முஹம்மது ஆஷிக் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்காயிதா பிறை 1 (15/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நிறைவேற்றப்படயுள்ளது.
_____________________________________________
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாக அனுமதி பெற்று நடைபெறும் நிக்காஹ்:
நமதூர் நடுத்தெரு V.T.A ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் மகனார் முஹம்மது நிஷான் அலி மணமகனுக்கும் நாகப்பட்டினம் S.முஹம்மது உபையத்துல்லா அவர்களின் மகளார் ஹஸ்மத் ஷஃபானா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1439 துல்காயிதா பிறை 1 (15/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நாகப்பட்டினம் மரைக்காயர் மஸ்ஜித்தில் நிறைவேற்றப்படயுள்ளது.
_____________________________________________
நமதூர் மலாயத்தெரு E.K.M.S பஷீருதீன் அவர்களின் மகளார் மஹமூதத்துல் இம்ரானா மணமகளுக்கும் கூத்தூர் S.அப்துல் அஹது அவர்களின் மகனார் இம்தியாஸ் அஹமது மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்காயிதா பிறை 1(15/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு கீழ்வேளூர் ஹனிப் மஹாலில் நிறைவேற்றப்படயுள்ளது.
_____________________________________________
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
_____________________________________________
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாக அனுமதி பெற்று நடைபெறும் நிக்காஹ்:
நமதூர் நடுத்தெரு V.T.A ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் மகனார் முஹம்மது நிஷான் அலி மணமகனுக்கும் நாகப்பட்டினம் S.முஹம்மது உபையத்துல்லா அவர்களின் மகளார் ஹஸ்மத் ஷஃபானா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1439 துல்காயிதா பிறை 1 (15/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நாகப்பட்டினம் மரைக்காயர் மஸ்ஜித்தில் நிறைவேற்றப்படயுள்ளது.
_____________________________________________
நமதூர் மலாயத்தெரு E.K.M.S பஷீருதீன் அவர்களின் மகளார் மஹமூதத்துல் இம்ரானா மணமகளுக்கும் கூத்தூர் S.அப்துல் அஹது அவர்களின் மகனார் இம்தியாஸ் அஹமது மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்காயிதா பிறை 1(15/07/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு கீழ்வேளூர் ஹனிப் மஹாலில் நிறைவேற்றப்படயுள்ளது.
_____________________________________________
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
Thursday 12 July 2018
Wednesday 11 July 2018
நமதூர் நிக்காஹ் தகவல் 11/07/2018
நமதூர் வடக்கு தெரு P.S.M நூருல்லாஹ் அவர்களின் மகனார் முஹம்மது அசாருதீன் மணமகனுக்கும் காட்டூர் அகரதிருநல்லூர் P.A.அப்துல் பத்தாஹ் அவர்களின் மகளார் நூருல் ஜாஸ்மின் மணமகளுக்கு இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 ஷவ்வால் பிறை 26 (11/07/2018)அன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு வடக்கு தெரு மணமகன் இல்லத்தில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் ஜமாஅத் நிர்வாகத்தால் நிறைவேற்ற உள்ளது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
Tuesday 10 July 2018
Monday 9 July 2018
Sunday 8 July 2018
கொடிக்கால்பாளையம் - பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க ஒரே மென்பொருள் தமிழக அரசு உத்தரவு
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புக்கான தலைமைப் பதிவாளர் குழந்தை சாமி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவு நடவடிக்கைகளை வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சி.ஆர்.எஸ். என்ற பொதுவான மென்பொருளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்பதாக வெவ்வேறு வகையான மென்பொருட்களை அந்த துறைகள் பயன்படுத்தி வந்தன.
இணைக்க உத்தரவு
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பதிவில் ஒரே சீரான நிலையை ஏற்படுத்தும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புக்கான தலைமைப் பதிவாளர் உருவாக்கிய மென்பொருளை 1.10.17 அன்றிலிருந்து அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் நலன் தொடர்பான பணிகளுக்காக பிஐசிஎம்இ 2.0 என்ற மற்றொரு மென்பொருள் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிஐசிஎம்இ 2.0 மற்றும் புதிய பொதுவான சி.ஆர்.எஸ். ஆகியவற்றை இணைக்க அரசு உத்தரவிட்டது.
அறிவுரை
இந்த மென்பொருள் மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்களை, அரசு மற்றும் அரசு அல்லாத பணிகளுக்கு அங்கீகாரம் பெற்ற சான்றாக சட்டரீதியாக பயன்படுத்தலாம். ஏனென்றால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், இணையதளம் மூலமாக மட்டுமே பதிவாளர்களால் வழங்கப்பட முடியும்.
எனவே உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் பதிவாளர்களையும், அதற்கான சான்றிதழ்களை புதிய பொதுவான சி.ஆர்.எஸ். என்ற மென்பொருள் மூலமாக வழங்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday 6 July 2018
Thursday 5 July 2018
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் கூறி உள்ளது.
கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை முதலில் போலீசார் கடைபிடிக்க வேண்டும். கேரளாவை போன்று தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளன அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என கூறி உள்ளது.
Wednesday 4 July 2018
Tuesday 3 July 2018
Monday 2 July 2018
Sunday 1 July 2018
வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 01/07/2018
நமதூர் ஹாஸ்பாவா தர்ஹா முன்னாள் சிப்பந்தி முஹம்மது கோயா அவர்கள் கேரளா கோழிக்கோட்டில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்.
Subscribe to:
Posts (Atom)