Friday 3 June 2016

ரூ. 2.31 கோடி மதிப்பு பாடப் புத்தகங்கள் விநியோகம்


திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 2.31 கோடி மதிப்பில் பாடப் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி அவர் மேலும் பேசியது:
மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் 73,605 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.31 கோடி மதிப்பில் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மேலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் ரூ. 10,084 மாணவாóகளுக்கு ரூ. 35.29 லட்சம் மதிப்பில் தலா ஒரு செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 12,384 மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 55,000 மதிப்பில் தலா ஒரு செட் சீருடைகள் வழங்கப்பட்டன என்றார் மதிவாணன். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கர், வட்டாட்சியர் ராஜன்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment