Sunday 22 January 2017

தமிழகத்தின் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிய முதல்வர்

ல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி போராடிவரும் மக்கள்  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அலங்காநல்லூருக்குள் நுழைய விடாமல் தடுத்தாதால் அவர் தன் பயணத் திட்டத்தை  மாற்றியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்டத்தை மக்கள் ஏற்கவில்லை. இருந்தாலும் கண்டிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவேன் என மதுரை அலங்காநல்லூருக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஊருக்குள் வரவிடாமல் வழியில் தடைகளை போட்டு, மக்கள் ஊருக்குள் வரவிடாமல் செய்தனர். 
மேலும் ஒரு காளையையும் தர முடியாது என அவர்கள் திட்டவட்டமாக கூறினர். இதனால் , முதல்வர் பன்னீர் செல்வம் அலங்காநல்லூருக்கு பதில், நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில்
ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டார். ஆனால் அங்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அரசின் அனைத்து முயற்சி தோல்வியில் முடிந்தது. தமிழகத்தின் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் முதல்வர் திரும்புவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment