Monday 2 January 2017

பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக் கொள்ளலாம்: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வரும் ஜூன் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித் திருக்கிறது. டிசம்பர் 30-க்குள் மாற்றிக்கொள்ளாத இந்தியர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்தியர்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டு களை மாற்றிக்கொள்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடை யாது. ஆனால் ஃபெமா விதிமுறை களின்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
ஆதாரம் முக்கியம்
இந்தியாவில் வசிப்பவர்கள் முறையான அடையாள சான்று களை கொடுத்து பழைய நோட்டு களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் வெளிநாட்டில் இருந்த வர்கள் இந்த இடைப்பட்ட காலத் தில் வெளிநாட்டில் இருந்ததற்கான ஆதாரமும், இதுவரை எந்த தொகையும் மாற்றிக் கொள்ள வில்லை என்பதற்கான ஆதாரமும் கொடுக்க வேண்டும். சம்பந்தப் பட்ட நபரைத் தவிர மூன்றாம் நபர் மூலமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியாது.
இந்த வசதி மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய நகரங் களில் இருக்கும் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயத்தில் நேபாளம், பூடான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியாது.

No comments:

Post a Comment