Wednesday 26 October 2016

மும்முறை தலாக்; இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது - பிரதமர் மோடி பேச்சு

மும்முறை தலாக் முறையினால் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார். 

இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்த மத்திய அரசும் இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

இதற்கிடையே இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறைக்கு தடை விதிக்கவும், நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய ’பொது சிவில் சட்டம்’  தொடர்பாகவும் சமீபத்தில் மத்திய சட்ட கமிஷன் பொதுமக்களின் கருத்தை கோரியது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன... இதனையடுத்து இஸ்லாமிய சமூகத்தில் ’மும்முறை தலாக்’ முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தனித்தனியாக கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இவ்விவகாரம் தொடர்பாக முதல் முறையாக பேசினார். 
மும்முறை தலாக் முறையினால் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது என்றார். 

பிரதமர் மோடி பேசுகையில், அடுத்த 10 வருடங்களில் உத்தர பிரதேசம் வளர்ச்சி அடையவேண்டும் என்றால் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் என்ற ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒரு கையில் குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள், மற்றொரு கையில் ஆட்சி அதிகாரத்தை பெற முயற்சிக்கிறார்கள். நாங்கள் உத்தரபிரதேச மாநிலத்திற்கு பணியாற்ற வேண்டும். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிற பிரதமர்களைவிட அதிகமான நற்பணிகளை உ.பி.க்கு செய்ய நான் முயற்சி செய்கின்றேன் என்றார்.  

அரசியலமைப்பின் கீழ் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் பொறுப்பு ஆகும். சீர்திருத்தம் வேண்டும் என்ற இஸ்லாமியருக்கும், வேண்டாம் என்று கூறும் இஸ்லாமியர்களுக்கும் இடையே விவாதமானது நடத்தப்பட வேண்டும். மும்முறை தலாக் முறையினால் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்க கூடாது என்றார் பிரதமர் மோடி. 

இவ்விவகாரத்தில் வாக்குவங்கி அரசியலால் தான் அதிர்ச்சி அடைவதாக கூறிய பிரதமர் மோடி, “சில கட்சிகள் இஸ்லாமிய பெண்கள் அவர்களது அடிப்படை உரிமையை பறிக்கப்பட்ட நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறது. ஒரு ஆண் தொலைபேசியில் ஒரு பெண்ணிடன் மூன்று முறை தலாக் கூறிவிட்டால், அந்த பெண்ணுடயை வாழ்க்கையானது அழிந்துவிடாது? இவ்விவகாரம் அரசியல் ஆக்கப்பட கூடாது என்றார். மேலும் டிவியில் விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கு கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, இஸ்லாமிய பெண்களின் உரிமையை இஸ்லாமியம் மற்றும் இந்து பிரச்சனையாகாக்காதீர்கள் என்றார். பெண்களின் உரிமையானது வளர்ச்சி விவகாரம். 

மும்முறை தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள். பெண்களுக்கும் சம உரிமையை கொடுக்க நடவடிக்கை எடுக்க அனுமதியுங்கள் என்றார் பிரதமர் மோடி. 

No comments:

Post a Comment