Wednesday 18 May 2016

திருவாரூர் மாவட்டத்தின் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 84.18

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் 105 பள்ளிகளைச் சேர்ந்த 5,839 மாணவர்களும், 8,082 மாணவிகள் என 13,921 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,566 மாணவர்கள், 7,153 மாணவிகள் என மொத்தம் 11,719 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 84.18 ஆகும்.
மாநில அளவில் திருவாரூர் கல்வி மாவட்டம் 31-வது இடத்தில் 84.18 சதவீதம் பெற்றுள்ளது. கடந்த கல்வியாண்டில் 83.08 சதவீதம் பெற்று மாநில அளவில் 32-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட அளவில் முத்துப்பேட்டை ரஹமத் மெட்ரிக்பள்ளி மாணவி எஸ். காவியா 1,181 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், திருவாரூர் சேந்தமங்கலம் தி மெரிட் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஜெ. வெங்கடேஷ்வரன் 1,178 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக்பள்ளி மாணவி ஆர். ஐஸ்வர்யா 1,175 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளைப் பொருத்தவரை 65 பள்ளிகளில், ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு உதவிப் பெறும் பள்ளியில் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
100 சத தேர்ச்சி பெற்ற மெட்ரிக் பள்ளிகள்: கூத்தாநல்லூர் ரஹமத் மெட்ரிக் பள்ளி, உள்ளிக் கோட்டை நவபாரத் மெட்ரிக்பள்ளி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்பள்ளி, செயின்ஜூட் மெட்ரிக்பள்ளி, திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக்பள்ளி, செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி, முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளி, மன்னார்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக்பள்ளி, சண்முகா மெட்ரிக்பள்ளி, வலங்கைமான் ஸ்ரீமகாதேவ குருஜீ மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
இதே போல் மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றோர் விவரம்: பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஐ. ஜானகி 1,146 மதிப்பெண்களும், உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். முகிலன் 1,126 மதிப்பெண்களும், கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கே. பிரேமி 1,101 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்றோர்: திருவாருர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். ரெங்கநாயகி 1,171 மதிப்பெண்களும், மன்னார்குடி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சினி 1,162 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், திருவாரூர் சீதாலட்சுமி 1,161 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

No comments:

Post a Comment