Monday 12 September 2016

விநாயகர் சிலை ஊர்வலத்தில் முன்னாள் எம்.பி. வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது கல்வீச்சு போலீஸ் விசாரணை

முத்துப்பேட்டையில் நேற்று வெற்றி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் பட்டுக்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரோ ஒருவர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமான் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது. இதில் கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment