Thursday 28 January 2016

வெள்ளத்தில் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்கள் இன்று முதல் விநியோகம்: பள்ளி கல்வித்துறை

சமீபத்தில் பெய்த கனமழையில் ஏராளமான மாணவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்களை பறிகொடுத்தனர்.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி, கோரிக்கை மனு அளித்த மாணவர்களுக்கு  உரிய கல்விச்சான்றிதழ் நகல்களை வழங்க கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, விண்ணப்பித்த இடங்களிலேயே இன்று முதல் சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment