
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலிதீன் பொருட்களை தயாரித்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழலுக்கு தீங்கு
திருவாரூர் மாவட்ட நகர்புறம் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை பயன்படுத்த கூடாது.
மறுசுழற்சிக்கு பயன்படாத பாலிதீன் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அபராதம்
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலிதீன் பொருட்களை தயாரித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். கடைகளில் பாலிதீன் பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறை ரூ.250, 2-ம் முறை ரூ.500, 3-ம் முறை ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விற்பது கண்டறியப்பட்டால் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். பாலிதீன் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment