Sunday 26 July 2015

பி.இ. கலந்தாய்வு 28-இல் நிறைவு


பி.இ. பொது கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.
பி.இ. பொது கலந்தாய்வு கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை (சனிக்கிழமை நிலவரப்படி) 1,27,776 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 89,141 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டும் 38,168 பேர் பங்கேற்கவில்லை. 467 பேர் விருப்பமான பாடங்கள் கிடைக்காததால் கலந்தாய்வில் இருந்து வெளியேறினர். பொது கலந்தாய்வு நிறைவடைவதற்கு ஓரிரு தினங்கள் உள்ள நிலையில், காலியாக இருக்கும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment